About us

அல் அஸ்ஹர் மழலையர் பள்ளிக்கூடம்  

அறிமுகம்:
சமூக ரீதியாகவும் கல்வி ரீதியிலும் மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயங்களை வலிமைப்படுத்த பல்வேறு காலகட்டத்தில் சீரிய முயற்சிகள் பல செய்யப்பட்டாலும் அது எட்டாக்கனியாக போனதற்கு கல்வியில் பிந்தங்கியதுதான் காரணம் என பரவலாக உணரப்பட்டது.

அரசாங்கத்தின் எந்த சலுகைகளும் அடித்தட்டு விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு கிடைக்காமல் போனதற்கும் அடிப்படை காரணம் கல்வியின்மை மற்றும்  விழிப்புணர்வு இன்மை என்று உணர்ந்த காரணத்தால் பிற்பட்ட சமுதாயங்கள் தம் சொந்த வளங்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற தன்னர்வத்தினாலும் கல்வி சேவையை நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தொடங்க வேண்டும் என்ற சமூக அக்கறையும் அர்பணிப்பும் கொண்ட கல்வியாளர்களால் அல் அஸ்ஹர் மழலையர் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Please add comments relevant to the topic especially primary school education